Tweet

My Blog List

Total Pageviews

Tuesday, April 24, 2012

இனி, மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம்: ட்ராய் அறிவிப்பு

இனி ரூ.20க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்கள் கூடுதலாக ரூ.1 பிராசஸிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்திய தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நிறைய கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து இதுவரை ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களிடம் ரூ.2 பிராசஸிங் கட்டண வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி அந்த 2 ரூபாய் அல்லாது கூடுதலாக, ரூ.1 பிராசஸிங் கட்டணமாக ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும். இது ரூ.20 மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு. ரூ.20-க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் அவசியம் இல்லை.

அதிகமாக மொபைல்களை பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிலும் 90 சதவிகிதம் பேர் ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்கள். வெறும் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

0 comments:

Post a Comment