Welcome to Technical Kirukkan

Free Downloads,Mobile Stuff, PC Stuff, Downloads, Technology Reviews ans Stuff and alot you can get here.

Need Help on Troubleshooting PC's

We are ready to help you for any Repair or Troubleshoot your PC for free, just send a mail to techkirukkan@live.com for Tech Support .

Android, Symbain, Java, Anna OS Support for Mobiles

You can find here for any OS Updates, New Application Launches in Android Market,and other Java,SIS updates with Tech support for your Mobile Repairs and Upgrades.

Get Aware and Live Easy with Technology

Unlimited Free Tech Support for your Devices ,mail us at techkirukkan@live.com.

Tweet

My Blog List

Total Pageviews

Friday, April 27, 2012

How to write tamil in mobile phones ?

இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser ) http://www.opera.com/mobile/ பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
ஒபேரா உலாவியின் (settings)அமைப்புகள் பகுதிக்கு சென்று ("Font Size")எழுத்துரு அளவை பெரியது(Large) ஆகவும், (Mobile view) ஐ "ON" ம் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்
(address Bar") முகவரிப்பட்டையில் about:config என தட்டச்சு செய்து config page பக்கத்திற்கு சென்று அப்பக்கத்தின் இறுதியில்/அடியில் உள்ள "Use bitmap fonts for complex scripts" ஐ "YES" ஆம் என தெரிவு செய்த பின் சேமித்துக்கொள்ளுங்கள். இறுதியாக ஒபேரா உலாவியை மீள தொடக்குங்கள் (Restart)

உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தளத்தில் எழுத முடியுமா ?
இதோ அதற்கான வழி



miniopera உலாவியில் http://scriptconv.googlelabs.com/  இந்த இணையத்தள முகவரிக்கு ( Address) சென்று தமிழ் உச்சரிப்பை அவ்வாறே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும் (Please type in English as you pronounce words in Tamil. பின்னர் தமிழிற்கு மாற்றவும்( Convert it to Tamil). அதன் பின்னர் அதனை பிரதி (Copy) செய்து வேண்டிய இடத்தில் ஒட்டுங்கள் (paste).

Are you unable to view Tamil web pages / Tamil Unicode Fonts in your Mobiles? Follow these Steps...
உங்கள் கைத்தொலைபேசியில் தமிழ் ஒருங்குறியிலமைந்த இணையப் பக்கங்களை பார்வையிட முடியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser from http://www.opera.com/mobile/ )பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.இப்பொழுது உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.
இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
Now

# click "settings"

# Now change the "Font size" as "large"

# Then check the "Mobile view"box"

# Then "Save"the settings.

Now again

Type "about:config" in the "address bar"

# Then "go to" config page.It will open a page named "Power User settings"

 # go to the bottom of the "Power user setting" page.

# you will see option named "use bitmap fonts for complex scripts"

# Check "Yes" for "Use bitmap fonts for complex scripts"

# Then "Save" the setting.

இப்பொழுது உங்களால் நிச்சயமாக தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.

அல்லது 

இந்த  மென்பொருளை  பயன்படுத்தி  எழுதிடலாம் 

தரவிறக்க சுட்டி

தினமும் 11 மணி நேரம் உட்கார்ந்திருந்தால் 3 ஆண்டில் உயிருக்கு ஆபத்து!

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.



2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில் , இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம்.குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.

இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

.* 45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2006,10 வரை 5 ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
* ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம்.
* பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது ஆபத்தானது.

Tuesday, April 24, 2012

இனி, மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம்: ட்ராய் அறிவிப்பு

இனி ரூ.20க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்கள் கூடுதலாக ரூ.1 பிராசஸிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்திய தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நிறைய கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து இதுவரை ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களிடம் ரூ.2 பிராசஸிங் கட்டண வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி அந்த 2 ரூபாய் அல்லாது கூடுதலாக, ரூ.1 பிராசஸிங் கட்டணமாக ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும். இது ரூ.20 மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு. ரூ.20-க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் அவசியம் இல்லை.

அதிகமாக மொபைல்களை பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிலும் 90 சதவிகிதம் பேர் ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்கள். வெறும் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

Sunday, April 22, 2012

நிலநடுக்கம்... நாம் செய்தது சரியா?

இந்தோனேஷியாவின் அச்சேவில் தேர்தல் களேபரங்கள் மாறாத இரண்டாவது நாள் அது. பூமி அதிர்ந்தது. கிட்டத் தட்ட 495 கி.மீ. தொலைவில், கடலில் 33 கி.மீ. ஆழத்தில் 8.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றும் இந்தோனேஷிய அரசு அறிவித்தது. கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது 1.7 லட்சம் பேரை சுனாமிக் குப் பறிகொடுத்த மாகாணம் அச்சே. இப்படி ஒரு சூழலில் தமிழர் களாகிய நாம் அச்சேவில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்?

இந்த இடத்தில், கடந்த வாரம் தமிழகம் முழுக்க மிதமாக நிலம் அதிர்ந்ததை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதைச் சற்று நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அலுவலக லிஃப்ட்டுகள் நிரம்பி வழிய, அவசர அவசரமாக வெளியேறியதையும்... அடுக்கு மாடி அலுவலகக் கட்டடத்தின் கீழ் ஒரு பொதுக் கூட்டத்துக்காக நிற்பதுபோலக் கூடி நின்றதையும்... எல்லோரும் எல்லோரிடமும் ஒரே நேரத்தில் செல் பேச முற்பட்டு, தொலைத்தொடர்புச் சேவையை முடக்கியதையும்... சாலைகள் ஸ்தம்பிக்க பாலங்களின் மீது வாகனங்களில் காத்திருந்ததையும்...



ஆனால், அச்சேவில் என்ன நடந்தது தெரியுமா? நிலநடுக்கத்தை உணர்ந்த அடுத்த நொடி, பள்ளிக் குழந்தைகள் மேஜை, நாற்காலிகளுக்குக் கீழே பதுங்கினர். 'பதற்றப்படாதீர்கள்’ என்று கூறிக்கொண்டே ஆசிரியர்கள் அவர்களை வேகமாக - ஆனால், வரிசையாக மாடிப் படிகள் வழியாகக் கீழே இறக்கி திறந்தவெளிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள், கடும் பாதிப்பு அடைந்தவர்கள், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று முன்னுரிமை அடிப்படையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். எழுந்து ஓடும் நிலையில் இருக்கும் நோயாளிகள் ஓடவில்லை. அவர்கள் காத்திருந்தனர்... தங்களுக்கான அழைப்பை எதிர்பார்த்து. வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறி திறந்தவெளியில் நின்றனர். சாலைகளில் பயணித்துக்கொண்டு இருந்தவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர்... பெரும் கட்டடங்களும் மரங்களும் பாலங்களும் அருகில் இல்லாத இடங்களாகப் பார்த்து. அப்புறம் மேட்டுப் பகுதியாகப் பார்த்துப் புறப்பட்டனர் அமைதியாக.

கடந்த ஆண்டு பூகம்பம், சுனாமி, அணுக் கதிர்வீச்சு ஆகியவற்றின் தாக்குதலை ஒருசேர எதிர்கொண்ட ஜப்பானில் நடந்ததும் இதுதான். பூகம்பத்தால் உருக்குலைந்த அன்றைய இரவு ஜப்பானியர்கள் கடைகளைத் திறந்தார்கள். சேதாரங்களின் இடையே மிஞ்சிய ரொட்டி களையும் புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவையும் மக்களுக்கு விநியோகித்தார்கள். மக்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியாக அவற்றைப் பெற்றுச் சென்றார்கள். ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான மடங்கு கதிர்வீச்சு வெளியேறிய நிலையிலும்கூட ஃபுகுஷிமாவைச் சுற்றி இருந்தவர்கள் ஜப்பானிய அரசின் அறிவுரைப்படி, முதலில் அணு உலைக்கு மிக அருகில் இருந்தவர்கள், அடுத்து அருகில் இருந்தவர்கள், அடுத்து சற்றுத் தொலைவில் இருந்தவர்கள் என்று பல்வேறு கட்டங்களாகவே வெளியேறினர்.

இந்தியாவில் இடர்களின்போது நேரடியாக ஏற்படும் உயிர் இழப்புகளைக் காட்டிலும், நெரிசலால் ஏற்படும் உயிர் இழப்புகளே அதிகம். ஒரு நிலநடுக்கத்தை நீங்கள் உணரும்போது, கதை அதோடு முடிந்துவிடுவது இல்லை; நூற்றுக்கும் மேற்பட்ட அதிர்வுகள் அடுத்தடுத்துக் காத்திருக்கும். நம்முடைய அரசாங்கம் எப்போது இதை எல்லாம் நமக்குச் சொல்லித்தரப்போகிறது?

நாம் பாதுகாப்பான வழியிலேயே தப்பிக்க  நினைக்கிறோம். ஆனால், அது பாதுகாப்பானதுதானா?

Courtesy :Vikatan

Friday, April 20, 2012

விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.



சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A.  ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag



ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை  எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

நன்றி: உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

Thursday, April 19, 2012

விரைவில் 5GB சேமிப்பு வசதியுடன் கூடிய கூகுள் டிரைவ் அறிமுகம்

இணைய உலகில் மக்களுக்கு பல முன்னணி சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது மேலும் ஒரு புதிய அம்சமான கூகுள் ட்ரைவ் எனும் இலவசமான ஓன்லைன் சேமிப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.இவ்வசதியானது 5GB சேமிப்பு வசதியை கொண்டிருப்பதுடன் முதன் முதலில் Windows, Mac, iOS, Android போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.


 

மேலும் இதனை கணணியின் மேலதிக வன்றட்டாக பயன்படுத்த முடியும், அத்துடன் கோப்புக்களையும் ஓன்லைனில் வைத்து திருத்தங்கள் மேற்கொள்ளும் வசதியும் உள்ளடக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அறிமுக திகதி உட்பட இதனைப்பற்றி கூகுள் இதுவரையில் எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

Tuesday, April 17, 2012

கம்ப்யூட்டர் தூங்கட்டுமா?


விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், மின்சக்தியை மிச்சப் படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டரி களில் பேட்டரிகள் கூடுதலான நாட்க ளுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். விண்டோஸ் 7 இந்த வகையில் Sleep, Hibernate, மற்றும் Hybrid Sleep என்ற மூன்று வசதிகளைத் தருகிறது.

இவற்றிற்கிடையே என்ன வேறுபாடு என்பதனை இங்கே விரிவாகப் பார்க்கலாம். இவற்றைக் கையாள்வதனை நீங்கள் ஏற்கனவே அறிந்தவராக இருந்தாலும், கீழே தந்துள்ள குறிப்புகளைப் படித்து மீண்டும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.


1. ஸ்லீப் மோட் (Sleep mode):

இது ஒருவகை மின்சக்தி மிச்சப்படுத்தும் வழி. இதன் இயக் கம், டிவிடியில் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், pause அழுத்தித் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்பாகும். கம்ப்யூட்டரின் அனைத்து இயக்கங் களும் நிறுத்தப்படும்.

இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கங்களும், திறந்திருக்கும் டாகுமெண்ட்களும் மெமரியில் வைக்கப்படும். மீண்டும் இதனைச் சில நொடிகளில் இயக்கி விடலாம். அடிப்படையில் இது “Standby” செயல்பாட்டினைப் போன்றதாகும். குறை வான காலத்திற்குக் கம்ப்யூட்டர் செயல் பாட்டினை நிறுத்த வேண்டும் எனில் இதனை மேற்கொள்ளலாம்.


2. ஹைபர்னேட் (Hibernate):

இதனை மேற்கொள்கையில், திறந்திருக்கும் உங்களுடைய டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கில் சேவ்செய்யப்படுகின்றன. கம்ப்யூட்டர் “shut down” செய்யப்படுகிறது.

இந்த ஹைபர்னேட் நிலையில் இருக்கையில், கம்ப்யூட்டர் ஸீரோ மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. மீண்டும் இதற்கு மின்சக்தி அளிக்கப்படுகையில், அனைத்தும் விட்ட இடத்திலிருந்து இயக்க நிலைக்கு வருகின்றன. அதிக நேரம் பயன்படுத்தப் போவதில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரை குறிப்பாக லேப்டாப்பினை இந்த நிலைக்கு மாற்றலாம்.


3. ஹைப்ரிட் ஸ்லீப் (Hybrid Sleep):

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இணைந் ததுவே ஹைப்ரிட் ஸ்லீப் ஆகும். இது பொதுவாக டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்கள் மட்டுமே பயன்படுத்தும் வசதி. இந்த நிலையை மேற்கொள்கையில், திறந்து பயன்படுத்தக் கொண்டிருக்கும் டாகு மெண்ட்களும், சார்ந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும், ஹார்ட் டிஸ்க் மற்றும் நினைவகத்தில் வைக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிகக் குறைந்த மின்சக்தியில் உறங்கிக் கொண்டிருக்கும்.

நீங்கள் மீண்டும் வேலையைத் தொடங்க எண்ணி இயக்கியவுடன் மிக வேகமாக இவை பயன்பாட்டிற்குக் கிடைக்கும். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களில் இது மாறா நிலையில் இயங்கும்படி வைக்கப் பட்டுள்ளது. லேப்டாப்பில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை எப்போது ஸ்லீப் மோடில் போட்டாலும், அது உடனே ஹைப்ரிட் ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும்.

ஹைப்ரிட் ஸ்லீப் மோட், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கு ஏற்றதாகும். மின்சக்தி கிடைக்கும்போது, விண்டோஸ் இயக்கம் மெமரியை விரைவாக அணுக இயல வில்லை என்றால், உடனே ஹார்ட் டிஸ்க்கிலிருந்து பைல்களையும், அப்ளி கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்ளும்.

Thursday, April 5, 2012

நோக்கியா மினஞ்சல் லாட்டிரி நடத்தவில்லை .. உஷார்

பன்னாட்டளவில் மொபைல் போன்களைத் தயார் செய்து விற்பனை செய்துவரும் நோக்கியா நிறுவனம், தான் எந்த லாட்டரியும் நடத்தவில்லை என அறிவித்துள்ளது. மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட இதன் அறிக்கையில், பல நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் "நோக்கியா லாட்டரியில்' பங்கு கொண்டதாகவும், அதன் முடிவுகளை எதிர் நோக்கி இருப்ப தாகவும், பல இணைய மையங்களில் எழுதி உள்ளனர். யாருக்காவது முடிவு தெரிந்தால், உடனே தெரிவிக்கும்படி தங்கள் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளையும் அறிவித்துள்ளனர். 



இதனைக் கண்ட நோக்கியா நிறுவனம், நோக்கியா இதைப் போல எந்த லாட்டரியும் நடத்தவில்லை என்றும், இது போல நோக்கியாவின் நிறுவன இணையதளத்தில் இருந்து வருவது போலக் கிடைக்கும் மின்னஞ்சல் செய்திகள் தேவையற்ற பொய்ச் செய்திகள் என நோக்கியா அறிவித்துள்ளது.

இது போல வரும் மின்னஞ்சல் செய்திகளைப் பெறுபவர்களிடம், அவர்கள் பெயர்கள் லாட்டரியில் சேர்க்கப்பட பெயர், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கேட்டுவிட்டுப் பின்னர், ஒரு சிறிய தொகையினை இன்னொரு வங்கிக் கணக்கில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதனைக் கண்ட பலர், கேட்கப்படும் பணம் குறைவாக உள்ளதாலும், லாட்டரி பரிசு எக்கச்சக்கமாக இருப்பதாலும், போட்டுத்தான் பார்ப்போமே என்று எண்ணி, தங்கள் வங்கி அக்கவுண்ட் தகவல்களைத் தந்து பின்னர் பணத்தையும் செலுத்துகின்றனர்.

நோக்கியா இது போன்ற ஆசைத் தூண்டுதல்களுக்கு பலிகடா ஆகாதீர்கள் என்று தன் வாடிக்கை யாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது போல மின்னஞ்சல் அனுப்புபவர்கள், உங்களிடமிருந்து பெறும் தனிப்பட்ட தகவல்களைக் கூடத் தங்கள் மோசமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் எனவும் நோக்கியா அறிவுறுத்தி யுள்ளது. நோக்கியா மட்டுமின்றி, வேறு எந்த ஒரு தனிநபர் அல்லது புகழ் பெற்ற நிறுவனங்களின் பெயர்களில் இது போல திடீர் பணம் கிடைக்கும் என்று கேட்டு தகவல்களைத் திருடும் மின்னஞ்சல்களை உடனே அழித்துவிடும்படியும் நோக்கியா கேட்டுக் கொண்டுள்ளது.

துல்லியமான திரைகளை கொண்ட SH-06D ஸ்மார்ட் செல்பேசிகள்


ஐபோன்களுக்கு அடுத்தபடியாக முன்நிலையில் காணப்படும் ஸ்மார்ட் போன்களில் மேலும் ஒரு புதிய கைப்பேசி அறிமுகமாகியுள்ளது.SH-06D என்ற பெயருடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த கைப்பேசியின் திரைகள் மிகத்துல்லியமாக படங்களை காட்டக்கூடியன.

 

இவை அன்ரோயிட் 2.3 இயங்குதளத்தின் அடிப்படையில் செயற்படுவதுடன் தொடுதிரை வசதியையும் கொண்டுள்ளன.அத்துடன் வழமையான கைப்பேசிகளின் icons, widgets, wallpaper போன்றவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது.

இக்கைப்பேசியின் திரையானது 4.5 அங்குல அளவுடையதும், உயர் பிரிதிறனை உடையதுமான 3D MAGI display ஐக் கொண்டுள்ளது.மேலும் 1.2GHz dual-core புரோசசர், 512MB பிரதான நினைவகம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

Wednesday, April 4, 2012

கேன்சர் நோய்க்கு பாப்கார்ன் சாப்பிடுங்க

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாப்கார்ன், உடல் ஆரோக்கியத்தை காக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
சோள வகை உணவான பாப்கார்னில் உள்ள சத்துக்களும் பயன்களும் குறித்து அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.



பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ரான்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாப்கார்ன் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் தியேட்டர்களில் பாப்கார்ன் வாங்கி சாப்பிடுபவர்கள்தான் அதிகம். விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆய்வில் தெரிவித்துள்ள தகவல் வருமாறு -

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஊட்டச் சத்துள்ள உணவை அன்றாடம் எடுத்துக் கொண்டால் நோயின்றி வாழ முடியும். அந்த வரிசையில் பாப்கார்ன் மிகச் சிறந்தது. இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. நார்ச்சத்து அதிகம்.

காய்கறிகள், பழங்களில் உள்ளதை காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் ஊட்டச் சத்துகள் மற்றும் அமினோ அமிலங்கள் இதில் ஏராளமாக உள்ளன. அமினோ அமிலங்கள் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

மறதி நோய்க்கு மருந்தாகவும், இதயத்துக்கு இதமளித்து மாரடைப்பு உள்ளிட்ட இதய சம்பந்தமான நோய்களில் இருந்தும் காக்கிறது. உடலுக்கு தீமை பயக்கும் மூலக்கூறுகளை அழித்து ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள பாலிபினால் என்ற அமினோ அமிலம் பாப்கார்னில் அதிகம்.

இவை ரத்த நாளங்களை வலுவாக்கி சீரான ரத்த ஓட்டத்துக்கு வகை செய்கிறது.  பாப்கார்னை அன்றாடம் எடுத்து கொள்ளலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்

Tuesday, April 3, 2012

Change ‘security question’ of Facebook account

1. Login into Facebook account. Then goto Account > Account Settings at the top right.

2. Scroll down and click ‘change’ button next to ‘Security Question’ option.

3. Then select question of your choice using drop down menu.


4. Type your unique answer for selected question.

5. Then click ‘Change security question’ button to save new question and associated answer for your Facebook account.

Make sure you remember the selected question and answer to establish Facebook account ownership in the future as per requirement.

How To Apply TNPSC Exams Online Now?

Tamil Nadu Public Service Commission (TNPSC) today announced a slew of measures to make procedures for applying for government jobs easy for applicants.

Candidates should apply only through online in the Commission`s Website (www.tnpsc.gov.in) or other website specified by the TNPSC.
  Before applying, the candidates should have scanned image of their photograph and signature in CD/DVD/Pen drive as per their convenience.

  A valid e-mail ID or Mobile Number is mandatory for registration. email ID, should be kept active till the declaration of results. TNPSC will send Hall Tickets (Memorandum of Admission) for Written Examination, Interview Call Letters, other Memos etc. through the registered e-mail ID.

  Please note that all the particulars mentioned in the online application including Name of the Candidate, Post Applied, Communal Category, Date of birth, Address, Email ID, Centre of Examination etc. will be considered as final and no modifications will be allowed after the last date specified for applying online. Certain fields fixed and cannot be edited. Candidates are hence requested to fill in the online application form with the utmost care as no correspondence regarding change of details will be entertained.

  The candidates who wish to receive SMS should register their mobile number in the application.

1.Candidates are first required to go to the TNPSC`s website  www.tnpscexams.net  or www.tnpscexams.in

2.Click "Apply Online" to open up the On-Line Application Form.

With the new one-time registration system in place,one can give data and TNPSC will store basic details for five years and receive a unique ID. In the five years, he/she just needs to refer to the unique ID for the exam he/she wants to apply along with the fee.  

Click Here to Check More Details :

Hard drive prices expected to drop by end of April 2012 Hard drive prices expected to drop by end of April 2012

The past year hasn’t been too great for the PC market. There has been a noticeable slowdown of the market because of a number of reasons. Smartphones and tablets have done exceedingly well in comparison and while they aren’t going to wipe out the PC market completely, they are responsible partly for the slump. The Thailand floods also shut down several hard drive manufacturing companies. Seagate and WD were both affected during the floods and prices of drives shot up further. Demand has continued to rise steadily and supply has reduced and the extra stock has depleted over the end of last year. Prices almost doubled towards the end of last year and the beginning of this year.
Prices continue to spin out of control
Prices expected to drop soon


Now however, things are slowly improving it is said. Digitimes has been in touch with their industry source and it says that prices of hard drives will fall by some 10 percent by the end of April. A 500GB 3.5-inch format drive for example, today that sells for roughly 2,200 Taiwanese dollars, should fall to NT2,000. It’s still much higher than the prices of the same drive before the floods. Prices won’t go back to be completely normal either primarily because of the increased costs of manufacturing drives since the later half of last year.

Demands will continue to rise as Microsoft launches its new operating system, Windows 8, sometime in October this year. There’s also going to be an additional boost in hard drive demand, as Intel launches its upcoming processor lineup which in turn would increase the number of Ultra-books that are launched. Hard drive companies are being cautious about the year to come because of the continuing success of tablets and smartphones through this year. However, the market is said to do well in the second half of the year so things should improve as soon as the third and fourth quarters arrive.

Source : 03 Apr, 2012, 9:34 am IST | by Rossi Fernandes   Tech2.in

MP3 பிளேயர் தரும் ஆபத்து

 
 
வாக்மேன் மறைந்து எம்பி3 பிளேயர் வந்த போது, இசையை ரசிக்க, அனைவரும் அதற்கு மாறினர். மிகத் துல்லிதமான இசை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பிரச்னை இன்றி தரும் வசதி ஆகியவற்றினால், பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர்.

ஆனால், இது வேறு சில பிரச்னைகளைத் தருவதாக, டெல் அவிவ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து எம்பி3 பிளேயரை, ஹெட் செட் மாட்டி கேட்டு வருபவர் களுக்கு, மிக இளம் வயதிலேயே காது கேட் கும் திறன் படிப்படியாக குறையத் தொடங் குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

தற்போது நால்வரில் ஒருவருக்கு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

எம்பி3 பிளேயர் மட்டு மின்றி, தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஐ-பாட் மியூசிக் பிளேயர் பயன் படுத்துபவர்களின் கதியும் இதே தான் என வும் கூறி உள்ளனர்.

இதனால், இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து, ஒரு சந்ததியே செவிகளின் கேட்புத் திறன் குறைவாக உள்ளதாக அமைந்துவிடும் என்றும் எச்சரித்து உள்ளனர்.

அதிக சத்தத்தில் பாடல்களைக் கேட்பதனால், தொடர்ந்து தாங்க முடியாத அளவிற்கு ஒலி அலைகள் காதுகள் வழியாக மூளைக்குப் பயணமாகின்றன. இவை ஏற்படுத்தும் தீய விளைவுகளை, உடனடி யாக நாம் அறிய முடிவதில்லை.

படிப் படியாக அவை நம் கேட்கும் திறனைக் குறைக்கின்றன. தெரிய வரும்போது இதற்கான தீர்வு கிடைப்பதில்லை. வளரும் இந்த தீய பழக்கம் குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் களுக்கு அறிவித்தால் நல்லது.

Sunday, April 1, 2012

World's Longest Flight Lasts 18 1/2 Hours


" What crosses the largest ocean, 10 time zones and more than 8,700 miles, and depending upon the direction can take two days on the calendar — or no calendar time at all?
It's the longest commercial flight on Earth — Singapore Airlines Flight 19 from Los Angeles, carrying four pilots, 151 passengers and 543 meals for the 18½-hour trip. "



"I mean, that's a whole day, isn't it?" asked Janet Rienstra, a passenger embarking on a recent run.
"I've never done it before, so we'll see," said another passenger, Denny Repko. "The last four hours might get to be a bit much." 

With this route, Singapore Airlines is beginning the next trend in passenger travel — ultralong-range flights. In June, it begins flying from New York over the North Pole, more than 10,000 miles down to the equator, and then on to Singapore, saving six hours. In a similar vein, Dubai-based Emirates Airlines soon begins service to New York and San Francisco. 

New Engines 

Such long flights are "something that's never been done before," said John Leahy, senior vice president of marketing for Airbus, which builds the new plane both airlines are flying.
This new Airbus plane is made of lighter materials and has a new wing design. It has four new fuel-efficient Rolls Royce engines, lighter and more powerful than before. Rolls Royce says the key to the engine's efficiency is huge fans, made significantly lighter with new blades made of titanium and air.
Not to be outdone, Boeing is building a long-range version of its 777, capable of flying even farther. Soon, virtually any pair of cities in the world could be connected by a non-stop flight.
"Eventually we'll see … Sydney to New York and other places in the United States," said Randy Baseler, senior vice president of commercial planes for Boeing. "These will become very important, particularly for the business traveler who's trying to save time." 

What to Do? 

About six hours into Rienstra and Repko's recent flight Feb. 9, the plane was over the Pacific after about the length of time it takes to fly from coast to coast in the United States. And there was still another 12 hours to go. So what do the passengers do?
"Sleep, watch TV, read, play games … look out the window," said passenger Alexandra Vekich.
"So far we figured out, my daughter and I, we could watch about 15 movies," said Kathy Vekich, Alexandra's mother. 

In fact, there are 50 movies on demand. And soon, there will be high-speed Internet access.
Most important, instead of the 300 seats the plane could have, it has only 181 seats, flat beds in business class and wider seats with more leg room in coach. There also are two standup buffets to encourage passengers to get up and move around, and there's upgraded food. Of course, the ticket costs 10 percent more than the fare for the direct flight, which must stop somewhere for refueling.
"I consider it a very valuable 18 hours, personally," said Francesca Hunter. "I love being able to be still, relaxed, have people waiting on me."
There might be new life to the old idea that getting there can be half the fun — but for Hunter and the other passengers there were still three hours to go. 

Source  : Bob Jamieson  : http://abcnews.go.com