Welcome to Technical Kirukkan

Free Downloads,Mobile Stuff, PC Stuff, Downloads, Technology Reviews ans Stuff and alot you can get here.

Need Help on Troubleshooting PC's

We are ready to help you for any Repair or Troubleshoot your PC for free, just send a mail to techkirukkan@live.com for Tech Support .

Android, Symbain, Java, Anna OS Support for Mobiles

You can find here for any OS Updates, New Application Launches in Android Market,and other Java,SIS updates with Tech support for your Mobile Repairs and Upgrades.

Get Aware and Live Easy with Technology

Unlimited Free Tech Support for your Devices ,mail us at techkirukkan@live.com.

Tweet

My Blog List

Total Pageviews

Wednesday, June 5, 2013

chat

Wednesday, August 22, 2012

விண்டோஸ் வேகமாக இயங்க



விண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான்.

தேவையற்றவற்றை இன்ஸ்டால் செய்து வைப்பது, அழிக்க வேண்டிய பெரிய அளவிலான பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் தேங்கவிடுவது, பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து, இயக்கிப் பின்னணியில் பயன்படுத்தாமல் வைத்திருப்பது என நாம் செய்திடும் பல கம்ப்யூட்டர் பாவச் செயல்களைச் செய்திடலாம்.

இன்னும் இது போல நாம் தவறான பல வழிகளை மேற்கொள்கிறோமா என்று சிந்தனை செய்தால், பட்டியல் நீளும். அதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று எண்ணி, அவற்றில் சில இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன.

1. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.

2. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும்.

இவற்றை சி கிளீனர் (CCleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.

3. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை http://www.techrecipes.com /rx/1353 /xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.

4. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.

5. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.

6. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

7. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.

8. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.

9. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.

10. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாகவும் ராம் மெமரி பயன்படுத்துவது பாவம். இதனை அதிகரிக்கலாமே!

Saturday, July 14, 2012

மதுரையில் இன்று முதல், "ஏர் இந்தியா' சேவை : கொச்சி வழியாக வெளிநாடுகளுக்கு பறக்கலாம்

மதுரை : மதுரை - கொச்சி இடையே, விமான சேவையை, "ஏர் இந்தியா' இன்று முதல் தொடங்குகிறது. மதுரை டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா கூறியதாவது: மதுரை விமான நிலையத்தில், வெளிநாட்டு விமான சேவை தொடங்கவில்லை. "கஸ்டம்ஸ்' ஒப்புதல் கிடைத்த நிலையில், "இமிகிரேஷன்' ஒப்புதல் தாமதமாகி வருகிறது. டிராவல் கிளப் சார்பில், கடந்த ஆண்டு, மலேசியா நிறுவனத்திடம் பேச்சு நடத்தினோம். அவர்களும் பார்வையிட்டு சென்றனர். 

ஆனால், 150 கி.மீ.,ல், திருச்சி சர்வதேச விமான நிலையம் இருப்பதால், வர்த்தகம் பாதிக்கும் என கருதினர். கடந்த டிசம்பரில், மதுரையில் நடந்த கூட்டத்தில், ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. மதுரையை மையமாக வைத்து, ஒன்பது மாவட்டங்கள் பயன்பெறும் கோரிக்கையை முன்வைத்தோம். மதுரையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதன்மை அதிகாரி பங்கேற்ற கூட்டத்தில், இதற்கு பலன் கிடைத்தது. மதுரை - கொழும்பு விமான சேவைக்கு, "மிகின் லங்கா' முன்வந்துள்ளது. அந்நாட்டு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்திய அரசின் அனுமதி பரிசீலனையில் உள்ளது. நவம்பரில், "வின்டர்' சேவையாக, "மிகின் லங்கா' பயணத்தை தொடங்கும். இதற்கிடையில், மதுரை - கொச்சின் விமான சேவைக்கு, ஏர் இந்தியா முன்வந்துள்ளது.

இன்று முதல், திங்கள், புதன், வெள்ளியில், விமான சேவை இருக்கும். கொச்சியிலிருந்து மதியம் 3.30 மணிக்கு (எண் ஏ.ஐ., 9503), மதுரையிலிருந்து 4.15 மணிக்கு (எண் ஏ.ஐ., 9504) புறப்படும். இது ஒரு, ஏ.டி.ஆர்., ரக விமானம். இதில், 48 பேர் பயணிக்கலாம். இந்த விமானத்தில் சென்று, கொச்சியில் இருந்து ஜெட் ஏர்வேஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், குவைத் ஏர்வேஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, கல்ப் ஏர், டைகர் ஏர்வேஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில், வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம். அறிமுக சலுகையாக, ஆக., 31 வரை, 1,387 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். முன்னாள் தலைவர்கள் வாசுதேவன், ஸ்ரீராம் உடனிருந்தனர். தயாராகுது "ஹெலி பேட்' : மதுரையிலிருந்து, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், காரைக்குடிக்கு, "ஹெலிகாப்டர் சேவை' வழங்கவும், ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக, அந்த பகுதிகளில், "ஹெலி பேட்' அமைக்க உள்ளனர். மதுரை நகரை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதியும், அதில் இருக்கும்.

Saturday, July 7, 2012

ஜூலை 9 ல் கம்ப்யூட்டருக்கு எம கண்டம்; வைரஸ் தாக்கலாம் என எச்சரிக்கை!

பாஸ்டன்: வருகிற 9 ம் தேதியன்று கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கலாம் என்று  உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த வைரஸ் இணையத்தை முடக்கி கணினியை செயல் இழக்கச்செய்து விடும் என்று  கூறப்பட்டாலும், இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்றும்,  அதே சமயம் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் ஏற்கனவே இந்த வைரஸ் இருந்தால்,  வரும் 9 ம் தேதி நிச்சயம் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று கூறுகிறார்கள் கம்ப்யூட்டர்  நிபுணர்கள்.

டி.என்.எஸ்.(டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது,  நாம் வைத்துள்ள தளத்தின்  முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க  உதவுகிறது. தற்போது டி.என்.எஸ். சேஞ்சர் (அலூரியன் மால்வேர்) என்ற வைரஸை  உருவாக்கி இதன் மூலம் கணினியை செயல் இழக்கச் செய்யும் நாச வேலையில்  வெளிநாட்டைச் சேர்ந்த 7 பேர் இறங்கினர்.

இது கடந்த ஆண்டு நவம்பரில் பரப்பி விடப்பட்டது.இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள்  பாதிக்கப்பட்டன.மேலும் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு  பிரிவு எப்.பி.ஐ. மாற்று சர்வரை நிறுவி உதவியது.

இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம்  தேதி செயல்பட துவங்கி விடுமாம்.இதனால் உலகம் முழுவதும் பல லட்சம்   கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பை கண்டறிய

டி.என்.எஸ். சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து  முன்சோதனை செய்து கொள்ளவும்.பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ்  வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.நடுத்தரமானவர்கள் இது போன்று  ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.

எனவே கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள்  www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்படாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும்.  பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும்.

ஆக மொத்தத்தில் ஜூலை 9 ம் தேதி கம்ப்யூட்டருக்கு எம கண்ட தினம்தான் போல!

கூகுளினால் நிறுத்தப்படும் சேவைகள்



கூகுள் நிறுவனம் தனது சேவைகள் சிலவற்றை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.

கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது “Spring Cleaning” என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.

Google Talk Chatback: இது வலைத்தளங்களில் Google Chat Widget-ஐ வைக்கும் வசதியாகும். இதன் மூலம் இணையதள உரிமையாளர்கள் தங்கள் வாசகர்களுடன் கூகுள் சாட்டில் உரையாடலாம்.

தற்போது இந்த வசதியை கூகுள் நிறுத்தப்போகிறது. இதற்கு பதிலாக கூகுள் சமீபத்தில் கையகப்படுத்திய MeeboBar-ஐ பயன்படுத்த பரிந்துரை செய்கிறது.

iGoogle: iGoogle என்பது கூகுள் முகப்பு பக்கத்தை நமக்கு பிடித்தவாறு மாற்றிக் கொள்ளும் வசதி. இதில் பல்வேறு Gadget-களை வைத்துக் கொள்ளலாம். இந்த வசதியை அடுத்த வருடம்(2013) நவம்பர் ஒன்றாம் திகதி முதல் நிறுத்தப்போகிறது.

Google Video: கூகுள் நிறுவனம் யூட்யூப் நிறுவனத்தை 2006-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அதற்கு முன் கூகுள் வீடியோ என்ற பெயரில் வீடியோ சேவை இருந்தது.

2009-ஆம் ஆண்டிலிருந்து கூகுள் வீடியோ தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை நிறுத்திய கூகுள், வரும் ஆகஸ்ட் 20 முதல் அங்குள்ள அனைத்து வீடியோக்களையும் யூட்யூப் தளத்திற்கு மாற்றப்போகிறது.

Symbian Search App: சிம்பியன் இயங்குதள மொபைல்களுக்கு இருந்து வந்த Google Search அப்ளிகேசனையும் நிறுத்தப் போகிறது. அதற்கு பதிலாக மொபைல் உலாவியில் கூகுள் தளத்தை முகப்பு பக்கமாக வைக்க சொல்கிறது.

மேலும் கூகிள் மினி(Google Mini) என்னும் தேடுதலுக்கான வன்பொருள் சாதனத்தையும் இம்மாதம் 31ஆம் திகதி நிறுத்தப் போகிறது.

Monday, May 21, 2012

பிரவுசரிலேயே ஸ்கைப்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் வசதியினைத் தன் பிரவுசரிலேயே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஒருவருக்கொருவர் வீடியோ மற்றும் ஆடியோ வழி தொடர்பு கொள்ள, பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஸ்கைப் சாப்ட்வேர் தொகுப்பினைத்தான்.
 
 
 
 

யாஹூ மெசஞ்சர், கூகுள் போன்றவை இதற்குத் துணை புரிந்தாலும், பலரும் ஸ்கைப் அப்ளிகேஷனையே விரும்பு கின்றனர்.
ஸ்கைப் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்னர், அதன் வாடிக்கையாளர்களைத் தன் பிரவுசருடன் இணைக்கும் முயற்சி இது என இத்துறையில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் ஒன்றும் தவறு இல்லையே. ஸ்கைப் தேவைப்படுவோர் இப்போது அதற்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பைத் தனியே தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டியதுள்ளது. பிரவுசரிலேயே இது கிடைத்துவிட்டால், ஸ்கைப் பயன்படுத்துவோருக்கு மிகவும் எளிதாகப் போய்விடும்.

ஸ்கைப் பார் பிரவுசர்ஸ் (“Skype for Browsers”) என்ற திட்டத்திற்கு தொழில் நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுவதாக, மைக்ரோ சாப்ட் அறிவித்துள்ளதாகவும், அந்த அறிவிப்பே மேற்கூறிய தகவலை உறுதி செய்வதாகவும், சில இணைய தளங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பேஸ்புக் வழியாக ஸ்கைப் வசதியைப் பயன்படுத்த முடியும். ஆனால், இது முழுமையான ஸ்கைப் திறன் கொண்ட தல்ல. இதில் எச்.டி.எம்.எல்.5 வசதிகள் கிடைப்பதில்லை. எனவே மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் முயற்சிகள் இணைய வானத் தின் எல்லைகளைக் கூடுதல் வசதிகளுடன் விரிப்பதாக இருக்கும்.

இணையத்திற்கான ஸ்கைப் பதிப்பு வெளியானால், இணையத் தொடர்பினைத் தரும் எந்த ஒரு கம்ப்யூட்டர் மூலமாகவும், ஸ்கைப் தரும் வசதிகளை அனுபவிக்க முடியும். Voice over Internet Protocol எனப்படும் வசதி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும்.

மேலும் மைக்ரோ சாப்ட் தன் பிரவுசரிலேயே இதனைத் தருவது, இதே போல வசதியினைத் தரும் மற்ற அப்ளிகேஷன்களுக்குச் சரியான போட்டியைத் தரும். மைக்ரோசாப்ட் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இடம் முன்னணிக்கு வரும்; மற்ற பிரவுசர்களைப் பின்னுக்குத் தள்ளும். பல முன்னணி நிறுவனங்களின் (Apple, Google, Cisco, LifeSize etc.) வீடியோ கான்பரன்சிங் வர்த்தகம் நஷ்டத்தைச் சந்திக்கும்.

தற்போது ஸ்கைப் அப்ளிகேஷனை உலகெங்கும் ஏறத்தாழ 75 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோசாப்ட், ஸ்கைப் வசதியைத் தன் பிரவுசரில் மட்டுமின்றி, ஆபீஸ், விண்டோஸ், எக்ஸ்பாக்ஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றிலும் இணைத்திட முயற்சிகளை மேற்கொள்ளும் போல் தெரிகிறது. இந்த முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்தால், ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை விரைவில் நூறு கோடியைத் தாண்டும் என அனைவரும் கருதுகின்றனர்.

பலரும் இது சாத்தியமே என எண்ணுகையில், ஒரு சில வல்லுநர்கள், ஸ்கைப் போன்ற ஒரு ஆடியோ, வீடியோ அப்ளிகேஷனை, பிரவுசர் மற்றும் ஆபீஸ் போன்றவற்றுடன் இணைப்பது இயலாத ஒன்று எனக் கருதுகின்றனர்.
தகவல் தொழில் நுட்ப உலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை. எனவே ஸ்கைப் நமக்கு அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் இணைந்து கிடைக்கும் அந்நாளை எதிர்நோக்குவோம்

Sunday, May 20, 2012

சில தொழில் நுட்ப சொற்கள்

ஐ.பி. அட்ரஸ் (IP Address): கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.


ஸ்க்ராம்ப்ளிங் (Scrambling): கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவார் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனை சரி செய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப் பெறாது.

மதர்போர்ட் (Motherboard): பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.

பயாஸ் (BIOS - Basic Input Output System): அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம், ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம்.

ஒரு கம்ப்யூட்டருக்கு மின் சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவையான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

Saturday, May 19, 2012

ஜெ.அரசு ஒரு நாள் விளம்பரத்துக்காக ரூ 25 கோடி செலவு?

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று ஓராண்டு பூர்த்தி நேற்று நிறைவடைந்தது. இதனையொட்டி நேற்று பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகளுக்காக மாத்திரம், ரூ 25 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக FirstPost செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.



இவ் விளம்பர கட்டுரைகள் தமிழ் நாட்டுப் பத்திரிகை மற்றும் நாளிதழ்களில் மட்டுமல்லாது இந்தியா முழுதும் பேசப்படும் பல்வேறு மொழிகளிலான முக்கிய பத்திரிகை, நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

The Times of India, Hindustan Times, Economic Times, Asian Age, Indian Express, Financial Express, Hindu Business Lines, Mint, மற்றும் Business Standard ஆகிய நாளிதழ்களில் அதிலும் பெரும்பாலும் தமது முகப்பு பக்கத்தில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகள் வெளியிட்டிருந்ததாக மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, மும்பை, நியூடெல்லி ஆகிய நகரங்களில் வெளியாகாத பிற மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகைகளான The Statesman, Kolkata,The Telegraph ஆகிய பத்திரிகைகளிலும் கூட ஜெயலலிதா குறித்த செய்திகள் நேற்று வெளியாகியதாக அந்த ஊடகம் சுட்டிக்கட்டியுள்ளது.
இதன் மூலம் இதற்கு முன்னர் இந்தியாவில் 1994 இல் அறிமுகமான STAR Network தொலைக்காட்சி சேவை, தற்போது BPL மொபைல் மற்றும் வொடாஃபோன் மொபைல் என்பவையே கோடிக் கணக்கில் செலவு செய்து இந்தியா முழுதும் நாளிதழ்களில் விளம்பரம் செய்வது வழக்கம். அதிக பட்சமாக வொடாஃபோன் ரூ 10 கோடியை செலவு செய்து சாதனை படைத்திருந்தது.

ஆனால் தமிழக அரசு சார்பில் தற்போது ஒரு நாளில் ரூ 25 கோடி செலவுக்கு, இவ்விளம்பர சாதனையை படைத்திருக்கிறது என First Post மேலும் விமர்சித்துள்ளது.

Friday, May 18, 2012

உணவு உட்கொண்டதன் பின் குளிர்நீர் அருந்தாதீர்கள்!: இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.




ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

உணவு உண்ட பின் ஜில்லென்று குளிர்பானம் அருந்துவது இதயபாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உட்பட பல்வேறு இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும் போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள், அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது.
 
 


அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.