Welcome to Technical Kirukkan

Free Downloads,Mobile Stuff, PC Stuff, Downloads, Technology Reviews ans Stuff and alot you can get here.

Need Help on Troubleshooting PC's

We are ready to help you for any Repair or Troubleshoot your PC for free, just send a mail to techkirukkan@live.com for Tech Support .

Android, Symbain, Java, Anna OS Support for Mobiles

You can find here for any OS Updates, New Application Launches in Android Market,and other Java,SIS updates with Tech support for your Mobile Repairs and Upgrades.

Get Aware and Live Easy with Technology

Unlimited Free Tech Support for your Devices ,mail us at techkirukkan@live.com.

Tweet

My Blog List

Total Pageviews

Saturday, July 14, 2012

மதுரையில் இன்று முதல், "ஏர் இந்தியா' சேவை : கொச்சி வழியாக வெளிநாடுகளுக்கு பறக்கலாம்

மதுரை : மதுரை - கொச்சி இடையே, விமான சேவையை, "ஏர் இந்தியா' இன்று முதல் தொடங்குகிறது. மதுரை டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா கூறியதாவது: மதுரை விமான நிலையத்தில், வெளிநாட்டு விமான சேவை தொடங்கவில்லை. "கஸ்டம்ஸ்' ஒப்புதல் கிடைத்த நிலையில், "இமிகிரேஷன்' ஒப்புதல் தாமதமாகி வருகிறது. டிராவல் கிளப் சார்பில், கடந்த ஆண்டு, மலேசியா நிறுவனத்திடம் பேச்சு நடத்தினோம். அவர்களும் பார்வையிட்டு சென்றனர். 

ஆனால், 150 கி.மீ.,ல், திருச்சி சர்வதேச விமான நிலையம் இருப்பதால், வர்த்தகம் பாதிக்கும் என கருதினர். கடந்த டிசம்பரில், மதுரையில் நடந்த கூட்டத்தில், ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. மதுரையை மையமாக வைத்து, ஒன்பது மாவட்டங்கள் பயன்பெறும் கோரிக்கையை முன்வைத்தோம். மதுரையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதன்மை அதிகாரி பங்கேற்ற கூட்டத்தில், இதற்கு பலன் கிடைத்தது. மதுரை - கொழும்பு விமான சேவைக்கு, "மிகின் லங்கா' முன்வந்துள்ளது. அந்நாட்டு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்திய அரசின் அனுமதி பரிசீலனையில் உள்ளது. நவம்பரில், "வின்டர்' சேவையாக, "மிகின் லங்கா' பயணத்தை தொடங்கும். இதற்கிடையில், மதுரை - கொச்சின் விமான சேவைக்கு, ஏர் இந்தியா முன்வந்துள்ளது.

இன்று முதல், திங்கள், புதன், வெள்ளியில், விமான சேவை இருக்கும். கொச்சியிலிருந்து மதியம் 3.30 மணிக்கு (எண் ஏ.ஐ., 9503), மதுரையிலிருந்து 4.15 மணிக்கு (எண் ஏ.ஐ., 9504) புறப்படும். இது ஒரு, ஏ.டி.ஆர்., ரக விமானம். இதில், 48 பேர் பயணிக்கலாம். இந்த விமானத்தில் சென்று, கொச்சியில் இருந்து ஜெட் ஏர்வேஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், குவைத் ஏர்வேஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, கல்ப் ஏர், டைகர் ஏர்வேஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில், வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம். அறிமுக சலுகையாக, ஆக., 31 வரை, 1,387 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். முன்னாள் தலைவர்கள் வாசுதேவன், ஸ்ரீராம் உடனிருந்தனர். தயாராகுது "ஹெலி பேட்' : மதுரையிலிருந்து, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், காரைக்குடிக்கு, "ஹெலிகாப்டர் சேவை' வழங்கவும், ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக, அந்த பகுதிகளில், "ஹெலி பேட்' அமைக்க உள்ளனர். மதுரை நகரை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதியும், அதில் இருக்கும்.

Saturday, July 7, 2012

ஜூலை 9 ல் கம்ப்யூட்டருக்கு எம கண்டம்; வைரஸ் தாக்கலாம் என எச்சரிக்கை!

பாஸ்டன்: வருகிற 9 ம் தேதியன்று கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கலாம் என்று  உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த வைரஸ் இணையத்தை முடக்கி கணினியை செயல் இழக்கச்செய்து விடும் என்று  கூறப்பட்டாலும், இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்றும்,  அதே சமயம் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் ஏற்கனவே இந்த வைரஸ் இருந்தால்,  வரும் 9 ம் தேதி நிச்சயம் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று கூறுகிறார்கள் கம்ப்யூட்டர்  நிபுணர்கள்.

டி.என்.எஸ்.(டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது,  நாம் வைத்துள்ள தளத்தின்  முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க  உதவுகிறது. தற்போது டி.என்.எஸ். சேஞ்சர் (அலூரியன் மால்வேர்) என்ற வைரஸை  உருவாக்கி இதன் மூலம் கணினியை செயல் இழக்கச் செய்யும் நாச வேலையில்  வெளிநாட்டைச் சேர்ந்த 7 பேர் இறங்கினர்.

இது கடந்த ஆண்டு நவம்பரில் பரப்பி விடப்பட்டது.இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள்  பாதிக்கப்பட்டன.மேலும் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு  பிரிவு எப்.பி.ஐ. மாற்று சர்வரை நிறுவி உதவியது.

இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம்  தேதி செயல்பட துவங்கி விடுமாம்.இதனால் உலகம் முழுவதும் பல லட்சம்   கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பை கண்டறிய

டி.என்.எஸ். சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து  முன்சோதனை செய்து கொள்ளவும்.பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ்  வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.நடுத்தரமானவர்கள் இது போன்று  ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.

எனவே கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள்  www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்படாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும்.  பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும்.

ஆக மொத்தத்தில் ஜூலை 9 ம் தேதி கம்ப்யூட்டருக்கு எம கண்ட தினம்தான் போல!

கூகுளினால் நிறுத்தப்படும் சேவைகள்



கூகுள் நிறுவனம் தனது சேவைகள் சிலவற்றை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.

கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது “Spring Cleaning” என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.

Google Talk Chatback: இது வலைத்தளங்களில் Google Chat Widget-ஐ வைக்கும் வசதியாகும். இதன் மூலம் இணையதள உரிமையாளர்கள் தங்கள் வாசகர்களுடன் கூகுள் சாட்டில் உரையாடலாம்.

தற்போது இந்த வசதியை கூகுள் நிறுத்தப்போகிறது. இதற்கு பதிலாக கூகுள் சமீபத்தில் கையகப்படுத்திய MeeboBar-ஐ பயன்படுத்த பரிந்துரை செய்கிறது.

iGoogle: iGoogle என்பது கூகுள் முகப்பு பக்கத்தை நமக்கு பிடித்தவாறு மாற்றிக் கொள்ளும் வசதி. இதில் பல்வேறு Gadget-களை வைத்துக் கொள்ளலாம். இந்த வசதியை அடுத்த வருடம்(2013) நவம்பர் ஒன்றாம் திகதி முதல் நிறுத்தப்போகிறது.

Google Video: கூகுள் நிறுவனம் யூட்யூப் நிறுவனத்தை 2006-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அதற்கு முன் கூகுள் வீடியோ என்ற பெயரில் வீடியோ சேவை இருந்தது.

2009-ஆம் ஆண்டிலிருந்து கூகுள் வீடியோ தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை நிறுத்திய கூகுள், வரும் ஆகஸ்ட் 20 முதல் அங்குள்ள அனைத்து வீடியோக்களையும் யூட்யூப் தளத்திற்கு மாற்றப்போகிறது.

Symbian Search App: சிம்பியன் இயங்குதள மொபைல்களுக்கு இருந்து வந்த Google Search அப்ளிகேசனையும் நிறுத்தப் போகிறது. அதற்கு பதிலாக மொபைல் உலாவியில் கூகுள் தளத்தை முகப்பு பக்கமாக வைக்க சொல்கிறது.

மேலும் கூகிள் மினி(Google Mini) என்னும் தேடுதலுக்கான வன்பொருள் சாதனத்தையும் இம்மாதம் 31ஆம் திகதி நிறுத்தப் போகிறது.